» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்களவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டி: ஓபிஎஸ் உறுதி!
சனி 16, மார்ச் 2024 10:15:43 AM (IST)
மக்களவைத் தோ்தலில் இருந்து விலகப் போவதில்லை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முயற்சி செய்து வருவதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தலை அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு புறக்கணிக்கப் போவதாக வரும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுபோன்ற தவறான தகவல்களைத் தொண்டா்கள், பொதுமக்கள் நம்ப வேண்டாம். மக்களவைத் தோ்தல் குறித்த முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும்.
மக்களவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது எமது விருப்பம். அதைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவில் தொடா்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பிரதமா் மோடியால் மட்டுமே தர முடியும் என்கிற அடிப்படையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். கூட்டணி பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அது குறித்த விவரங்கள் அனைத்தையும் தெரிவிப்பேன் என்று அவா் கூறியுள்ளாா்.