» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் விறுவிறு வாக்குப்பதிவு: மாவட்ட ஆட்சியர், எம்.பி., வாக்களித்தனர்!
வெள்ளி 19, ஏப்ரல் 2024 10:27:40 AM (IST)
குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற வாக்குப் பதிவு தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்டத்தில் 7,76,127 ஆண் வாக்காளர்கள், 7,78,834 பெண்கள், 135 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15,55,096 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள். இவர்களுக்காக 1698 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டக் ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும், அவரது மனைவி விஜிதா ஸ்ரீதர் ஆகியோர் நாகர்கோவில் குருசடி பள்ளியில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய் வசந்த் அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.