» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி குடும்பத்துடன் வாக்களிப்பு - ஜோதிகா மிஸ்ஸிங்..!!!
வெள்ளி 19, ஏப்ரல் 2024 3:34:24 PM (IST)
நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தி, அப்பா சிவக்குமார் மற்றும் அம்மா லட்சுமி என குடும்பத்துடன் வந்து வாக்கினைப் பதிவு செய்தார். ஆனால், அவர்களுடன் நடிகை ஜோதிகா வரவில்லை.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 12.45 மணியளவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபையில் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். வாக்குப்பதிவை முடித்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி தங்கள் கையில் அடையாள மையினை காட்டி விட்டு சிரித்த முகத்தோடு அங்கிருந்து கிளம்பினர்.
இவர்களுடன் ஜோதிகா வராதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் அவர் மும்பையில் வீடு வாங்கி, அங்கேயே செட்டிலாகி இருப்பதால் இந்த தேர்தலில் வாக்களிக்க வரவில்லை எனக் கூறி வருகின்றனர்.