» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்: விஜய் வசந்த் எம்பி

சனி 4, மே 2024 5:15:40 PM (IST)

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரணத்திற்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டனுமான அன்பு அண்ணன் கே.பி.கே.ஜெயக்குமார் அவர்கள் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

அன்னாரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு ஜெயக்குமார் அவர்களுக்கு உண்டு. இன்முகத்துடன் அனைவருடனும் பழகி நட்பு பாராட்டும் அவரது பண்பு என்றும் அனைவரது உள்ளங்களிலும் நிலைத்து நிற்கும். எனது தந்தை அமரர் திரு. வசந்தகுமார் அவர்களிடம் ஆழமான மரியாதை வைத்து மிக நெருங்கி பழகியவர் ஜெயக்குமார் அவர்கள். 

அது போல் என்னிடமும் மிக அன்பு கொண்டு பழகி வந்தார். அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அன்பர்களின் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். ஜெயக்குமார் அவர்களின் மரணத்தின் காரணத்தை கண்டறிந்து அதற்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என காவல் துறை அதிகாரிகளை கேட்டு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory