» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 3பேர் கைது!
வெள்ளி 12, ஜூலை 2024 11:45:50 AM (IST)
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருள் என்பவரின் செல்போன் எண்ணில் இருந்த எண்களை விசாரணை நடத்தியும், பெரம்பூர் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் பந்தா்காா்டன் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரரான ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்த பொன்னை பாலு, அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூா் திருவேங்கடம், திருநின்றவூா் ராமு என்ற வினோத், அருள், செல்வராஜ், சிவசக்தி, கோகுல், விஜய் ஆகிய 11 பேரைக் கைது செய்தனா்.
கைதான 11 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என செம்பியம் காவல் ஆய்வாளா் எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இவர்களை 5 நாள்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி: முதல்வர் இரங்கல் - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:47:13 AM (IST)

ரயில் விபத்தில் 2 மாணவர்கள் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
செவ்வாய் 8, ஜூலை 2025 10:40:28 AM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: மாணவர்கள் 2 பேர் பலி!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:32:48 AM (IST)

நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல் வீட்டு வசதி சங்கங்கள் திண்டாட்டம்: ஊழியர்கள் தவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:22:55 AM (IST)

அஜித்குமார் கொலை சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க. போராட்டம் : காவல்துறை அனுமதி!
திங்கள் 7, ஜூலை 2025 5:38:08 PM (IST)

சாலை, மேம்பாலப் பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!
திங்கள் 7, ஜூலை 2025 4:43:39 PM (IST)
