» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவர் கைது!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:02:03 AM (IST)
தூத்துக்குடியில் மீன் வியாபாரம் செய்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் மனைவி பொன்மாரி (40), இவர் அத்திமரப் பட்டிரோட்டில் டாடா ஏஸ் வேனில் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், முத்தையாபுரம் சுந்தர் நகரை சேர்ந்த ராமசாமி மகன் பட்டாணி (43) என்பவர் தனது வேன் நிறுத்துமிடத்தில் வைத்து எப்படி மீன் வியாபாரம் செய்யலாம் என்று கேட்டாராம்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பட்டாணி பொன்மாரியை இரும்பு கம்பியால் தாக்கி, அவரது டாடா ஏஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினாராம். இது குறித்து பொன்மாரி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்குப் பதிந்து, பட்டாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்: புதிய கட்சியை அறிவித்தார் சசிகலா
வெள்ளி 13, மார்ச் 2026 4:47:08 PM (IST)

ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 13, மார்ச் 2026 4:14:42 PM (IST)

உடன்குடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வெள்ளி 13, மார்ச் 2026 3:31:44 PM (IST)

மாணவி படுகொலை: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
வெள்ளி 13, மார்ச் 2026 3:27:36 PM (IST)

சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)

