» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவர் கைது!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:02:03 AM (IST)
தூத்துக்குடியில் மீன் வியாபாரம் செய்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் மனைவி பொன்மாரி (40), இவர் அத்திமரப் பட்டிரோட்டில் டாடா ஏஸ் வேனில் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், முத்தையாபுரம் சுந்தர் நகரை சேர்ந்த ராமசாமி மகன் பட்டாணி (43) என்பவர் தனது வேன் நிறுத்துமிடத்தில் வைத்து எப்படி மீன் வியாபாரம் செய்யலாம் என்று கேட்டாராம்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பட்டாணி பொன்மாரியை இரும்பு கம்பியால் தாக்கி, அவரது டாடா ஏஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினாராம். இது குறித்து பொன்மாரி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்குப் பதிந்து, பட்டாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிபிஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பெரிய வழக்கு ஏதாவது இருக்கிறதா? சீமான் கேள்வி!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:45:48 PM (IST)

தவெகவை முடக்க திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:03:18 PM (IST)

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:50:26 PM (IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)

தூத்துக்குடியில் அக்.16ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:32:44 PM (IST)

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி : மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பரபரப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 3:13:31 PM (IST)
