» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவர் கைது!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:02:03 AM (IST)
தூத்துக்குடியில் மீன் வியாபாரம் செய்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் மனைவி பொன்மாரி (40), இவர் அத்திமரப் பட்டிரோட்டில் டாடா ஏஸ் வேனில் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், முத்தையாபுரம் சுந்தர் நகரை சேர்ந்த ராமசாமி மகன் பட்டாணி (43) என்பவர் தனது வேன் நிறுத்துமிடத்தில் வைத்து எப்படி மீன் வியாபாரம் செய்யலாம் என்று கேட்டாராம்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பட்டாணி பொன்மாரியை இரும்பு கம்பியால் தாக்கி, அவரது டாடா ஏஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினாராம். இது குறித்து பொன்மாரி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்குப் பதிந்து, பட்டாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது : அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
சனி 12, ஜூலை 2025 1:05:17 PM (IST)

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)

ஆளுநரின் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
வெள்ளி 11, ஜூலை 2025 4:33:19 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)
