» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவர் கைது!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:02:03 AM (IST)
தூத்துக்குடியில் மீன் வியாபாரம் செய்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் மனைவி பொன்மாரி (40), இவர் அத்திமரப் பட்டிரோட்டில் டாடா ஏஸ் வேனில் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், முத்தையாபுரம் சுந்தர் நகரை சேர்ந்த ராமசாமி மகன் பட்டாணி (43) என்பவர் தனது வேன் நிறுத்துமிடத்தில் வைத்து எப்படி மீன் வியாபாரம் செய்யலாம் என்று கேட்டாராம்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பட்டாணி பொன்மாரியை இரும்பு கம்பியால் தாக்கி, அவரது டாடா ஏஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினாராம். இது குறித்து பொன்மாரி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்குப் பதிந்து, பட்டாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)

கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை: சி.பி.ஐ. திட்டம்!
சனி 13, டிசம்பர் 2025 11:43:21 AM (IST)

சினிமா தயாரிப்பாளரை மிரட்டியதாக வழக்கு: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!
சனி 13, டிசம்பர் 2025 11:36:24 AM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: சவரன் ரூ.1 லட்சமாக உயர வாய்ப்பு!!
சனி 13, டிசம்பர் 2025 11:22:35 AM (IST)


