» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடன் செயலி மிரட்டல்: இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:35:56 AM (IST)
தூத்துக்குடியில் கடன் செயலி மிரட்டல் காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பால்பாண்டி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மது கார்த்திகேயன். இவர் தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காவிய சுதா (22), கடன் செயலி மூலம் ரூ.1லட்சம் கடன் வாங்கினாராம். அதில் ரூ.50ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக தவனை கட்ட வில்லையாம். இதையடுத்து கடன் செயலியில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் பணத்தை கட்டவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஆன்லைனில் வெளியிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் மனமுடைந்த காவிய சுதா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் செயலி மூலம் மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் திருமணமான 2 மாதத்தில் அவர் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தன்னையும் மக்களையும் நம்பாதவரே இரு தொகுதிகளில் போட்டி: விஜய் மீது சீமான் விமர்சனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:00:26 AM (IST)

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி : வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் பிரச்சாரம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:20:49 AM (IST)

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 10:12:28 AM (IST)

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:27:58 AM (IST)

இரு குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை: ஆயுள் தண்டனை கைதிக்கு சாகும் வரை சிறை...!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:18:30 AM (IST)

