» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடன் செயலி மிரட்டல்: இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:35:56 AM (IST)
தூத்துக்குடியில் கடன் செயலி மிரட்டல் காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பால்பாண்டி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மது கார்த்திகேயன். இவர் தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காவிய சுதா (22), கடன் செயலி மூலம் ரூ.1லட்சம் கடன் வாங்கினாராம். அதில் ரூ.50ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக தவனை கட்ட வில்லையாம். இதையடுத்து கடன் செயலியில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் பணத்தை கட்டவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஆன்லைனில் வெளியிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் மனமுடைந்த காவிய சுதா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் செயலி மூலம் மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் திருமணமான 2 மாதத்தில் அவர் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திங்கள் 24, மார்ச் 2025 5:13:22 PM (IST)

தொகுதி மறுவரையறை: தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு: முதல்வர் ஸ்டாலின்
திங்கள் 24, மார்ச் 2025 5:09:58 PM (IST)

பணியின் போது பத்திரிக்கையாளர்கள் மரணம்: ரூ.5லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 12:45:32 PM (IST)

தி.மு.க.விற்கு மக்கள்மீது அக்கறை இல்லை: ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!
திங்கள் 24, மார்ச் 2025 12:41:28 PM (IST)

கன்னியாகுமரி - சரளப்பள்ளி சிறப்பு ரயிலின் வழித்தடத்தை மாற்றி இயக்க கோரிக்கை!
திங்கள் 24, மார்ச் 2025 11:07:59 AM (IST)

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 24, மார்ச் 2025 10:23:33 AM (IST)
