» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடன் செயலி மிரட்டல்: இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:35:56 AM (IST)
தூத்துக்குடியில் கடன் செயலி மிரட்டல் காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பால்பாண்டி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மது கார்த்திகேயன். இவர் தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காவிய சுதா (22), கடன் செயலி மூலம் ரூ.1லட்சம் கடன் வாங்கினாராம். அதில் ரூ.50ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக தவனை கட்ட வில்லையாம். இதையடுத்து கடன் செயலியில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் பணத்தை கட்டவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஆன்லைனில் வெளியிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் மனமுடைந்த காவிய சுதா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் செயலி மூலம் மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் திருமணமான 2 மாதத்தில் அவர் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வியாழன் 1, ஜனவரி 2026 12:05:36 PM (IST)

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!
வியாழன் 1, ஜனவரி 2026 12:00:06 PM (IST)

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரூ.249 கோடி ஒதுக்கீடு
வியாழன் 1, ஜனவரி 2026 11:09:47 AM (IST)

முத்துநகர் அதிவிரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
புதன் 31, டிசம்பர் 2025 5:12:22 PM (IST)

ஜனவரியில் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை : மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி!!
புதன் 31, டிசம்பர் 2025 12:54:28 PM (IST)


