» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடன் செயலி மிரட்டல்: இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:35:56 AM (IST)
தூத்துக்குடியில் கடன் செயலி மிரட்டல் காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பால்பாண்டி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மது கார்த்திகேயன். இவர் தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காவிய சுதா (22), கடன் செயலி மூலம் ரூ.1லட்சம் கடன் வாங்கினாராம். அதில் ரூ.50ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக தவனை கட்ட வில்லையாம். இதையடுத்து கடன் செயலியில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர் பணத்தை கட்டவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஆன்லைனில் வெளியிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் மனமுடைந்த காவிய சுதா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் செயலி மூலம் மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் திருமணமான 2 மாதத்தில் அவர் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:40:47 AM (IST)

கோவில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: பெற்றோர் வீட்டில் தனியாக விட்டுச்சென்றதால் பரிதாபம்!!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:37:50 AM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

கண்ணகி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் கபடி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
சனி 1, நவம்பர் 2025 5:25:31 PM (IST)

தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை: துரை வைகோ
சனி 1, நவம்பர் 2025 4:56:34 PM (IST)

விடுப்பட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு முழு நடவடிக்கை எடுப்போம்: ஆட்சியர் உறுதி!
சனி 1, நவம்பர் 2025 4:06:26 PM (IST)




