» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜீரோ பாய்ன்ட் பகுதியில் தேசியக் கொடியை பராமரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்உத்தரவு
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 5:48:09 PM (IST)
கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட் பகுதியில் 147 அடி உயர கம்பத்தில் கட்டப்பட்டுள்ள தேசியக் கொடியை முறையாக பராமரிக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
நாகர்கோவிலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பி-யான விஜயகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, கடந்த 2022-ல் எனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீரோ பாய்ன்ட் பகுதியில் 147 அடி உயரத்தில் தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டது. அந்தக் கம்பத்தில் தற்போது தேசியக் கோடி பறக்கவிடுவதில்லை.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 148 அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் இரண்டாவது உயரமான கொடி கம்பம் முறையாக பராமரிக்கப்படாததால் கொடி பறக்காமல் வெறுமனே உள்ளது. கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட்டில் உள்ள 147 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிட உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல். விக்டோரியா கவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.ஆண்டோ பிரின்ஸ் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "147 அடி உயர கொடி கம்பத்தில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு தேசியக் கொடி பறக்கவிடப்பட்டு உள்ளது” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "இந்த தேசியக் கொடி கம்பம், கொடியை பராமரிக்க வங்கியில் வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. எனவே, 147 அடி உயர கொடி கம்பத்தில் கொடி தொடர்ந்து பறக்கும் வகையில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)

அதிகாரிகள் கொடுமையால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அன்புமணி குற்றச்சாட்டு
புதன் 9, ஜூலை 2025 10:46:28 AM (IST)

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரே காரணமா? தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
செவ்வாய் 8, ஜூலை 2025 4:46:14 PM (IST)
