» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடுக்கடலில் படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி வலைகள் சேதம் : எஸ்பியிடம் மீனவர்கள் புகார்!
வெள்ளி 4, அக்டோபர் 2024 5:29:13 PM (IST)

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சகாயராஜ் மற்றும் ஜெனிஸ்டன் ஆகிய இரண்டு மீனவர்கள் தங்களது இரண்டு பைபர் படகில் 13 மீனவர்களுடன் புன்ன காயல் கடற்பகுதியில் இருந்து 5 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் ஆழ் கடலில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அதிகாலை மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்யும் பகுதியில் அத்துமீறி நுழைந்த மாலத்தீவில் சரக்கை இறக்கிவிட்டு தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்ற முத்தா ரீகல் முத்தா மேக்கல் என்ற பார்ச் எனப்படும் சிறிய வகையிலான இரண்டு சரக்கு கப்பல்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 பைபர் படகுகள் மீது மோதியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக படகில் இருந்த மீனவர்கள் உயிர் தப்பியுள்ளனர். ஆனால் சரக்கு கப்பல் கடலில் வீசியிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகளையும் கிளித்துவிட்டு சேதப்படுத்தி நிற்காமல் சென்று விட்டது.
இதில் உயிர் தப்பிய 13 மீனவர்களும் பின்னர் புன்னகாயல் ஊர் திரும்பி இது சம்பந்தமாக ஊர் கமிட்டியிடம் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் ஊர் கமிட்டியினர் இன்று சரக்கு கப்பல் கிழித்த வலைகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து வலைகளை கிழித்த கப்பல் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
ஏற்கனவே கடந்த மாதம் 20ஆம் தேதி இவ்வாறு ஒரு கப்பல் வலைகளை கிழித்து மீனவர்களின் வலைகள் சேதமானது தற்போது மீண்டும் இவ்வாறு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் கப்பல் நுழைந்து வலைகளை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு மீன்வளத்துறை மற்றும் துறைமுக நிர்வாகம் கடலோர காவல் நிலைய போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தையின் பிரேதப் பரிசோதனை இடத்தில் தவெக எம்எல்ஏ பேரம்? - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:44:39 PM (IST)

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)

அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்: எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:05:11 PM (IST)

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகப் போராட்டம்: புரட்சிப் படை இயக்கம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:42:40 PM (IST)

மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது கால்ஷீட்? தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:53:37 PM (IST)

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:40:24 PM (IST)


