» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேருந்து நிலையத்தில் கேரள நபரிடம் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல்: போலீசார் விசாரணை
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:48:59 PM (IST)
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கேரள நபரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.35 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலையில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சத்தியவன் என்ற நபர் கையில் பையுடன் இருந்துள்ளார். போலீசார் அவரை சோதனை செய்ததில், அவரது பையில் கட்டுக்கட்டாக ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம் இருந்துள்ளது.
அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது, அதற்கான எந்த உரிய ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரை காட்டூர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்து பறிமுதல் செய்த ரூ.35 லட்சத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:37:25 PM (IST)

தமிழகத்தில் ஜன.15 முதல் வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:49:48 PM (IST)

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஓரிரு நாள்களில் புதிதாக ஒரு கட்சி இணைகிறது : இபிஎஸ் தகவல்
திங்கள் 12, ஜனவரி 2026 4:11:54 PM (IST)

காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது: அண்ணாமலை பாராட்டு
திங்கள் 12, ஜனவரி 2026 12:41:39 PM (IST)

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு உடந்தை: அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 12, ஜனவரி 2026 12:00:07 PM (IST)

