» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேருந்து நிலையத்தில் கேரள நபரிடம் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல்: போலீசார் விசாரணை
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:48:59 PM (IST)
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கேரள நபரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.35 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலையில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சத்தியவன் என்ற நபர் கையில் பையுடன் இருந்துள்ளார். போலீசார் அவரை சோதனை செய்ததில், அவரது பையில் கட்டுக்கட்டாக ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம் இருந்துள்ளது.
அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது, அதற்கான எந்த உரிய ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரை காட்டூர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்து பறிமுதல் செய்த ரூ.35 லட்சத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.4.51 கோடி ஓய்வூதிய நிதி மோசடி: அதிகாரிகள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு!
புதன் 17, ஜூன் 2026 7:22:55 AM (IST)

தமிழ்நாட்டின் கடன் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்வு: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 9:32:03 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)

குழந்தையின் பிரேதப் பரிசோதனை இடத்தில் தவெக எம்எல்ஏ பேரம்? - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:44:39 PM (IST)

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)


