» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டின் பூட்டை உடைத்து 19½ பவுன் தங்க நகைகள் திருட்டு : 4 பேர் கைது

வெள்ளி 20, ஜூன் 2025 8:10:01 AM (IST)

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19½ பவுன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புது அப்பனேரி சக்கரபாணி நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் நல்லசிவன்(67). இவரது வீட்டில் அண்மையில் 20 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள் திருடு போயின. இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகநாதன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  நவநீதகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர்கள்  செந்தில்குமார்  ராமச்சந்திரன் மற்றும் போலீசார் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்க்கிடமாக இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்ததில்  காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனிஷ் லாஸ் மகன் மோகன் (எ) சகாயராஜ் (48), சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரமேஷ்பாபு மகன் சதீஷ் (37), சாத்தூர் புல்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துராஜா (43) மற்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பொன்முருகன் (53) ஆகியோர் என்பதும்  கடந்த 01.06.2025 அன்று கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சக்கரபாணிநகரைச் சேர்ந்த கிருஷ்ணன்பிள்ளை மகன் நல்லசிவன் (67) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து 19½ பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்  என்பதும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் 4பேரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி மேற்படி திருடப்பட்ட நகைகளில் சுமார் 16½ பவுன் தங்க கட்டி மற்றும் அரை கிலோ வெள்ளிக்கட்டி ஆகியவற்றை எதிரிகளிடமிருந்து கைப்பற்றி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory