» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி கண்ணாடி பாலத்தில் தளவாய்சுந்தரம் ஆய்வு : மக்களின் அச்சத்தை போக்க வலியுறுத்தல்!
புதன் 10, செப்டம்பர் 2025 10:57:27 AM (IST)

கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தின் கண்ணாடி கீறல் விழுந்ததை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ தளவாய்சுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிக் கூண்டு பாலம் பராமரிப்பு பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான.என்.தளவாய் சுந்தரம் கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகில் கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உடனடியாக சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதே போன்று மாதம் மாதம் கண்ணாடி கூண்டு பாலத்திற்கான மாதம் ரூ.63 ஆயிரம் பராமரிப்பு செலவு தொகையை அதிகரிக்க வேண்டும், தமிழக அரசு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து பணிகளை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும் தற்போது பாலத்தில் கீறல் விழுந்த கண்ணாடி,மாற்றப்பட்டு புதிய கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

கல்வி கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசுக்கு விஜய் கேள்வி!
சனி 13, செப்டம்பர் 2025 4:10:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு!
சனி 13, செப்டம்பர் 2025 3:54:37 PM (IST)

உருட்டுSep 10, 2025 - 12:18:47 PM | Posted IP 172.7*****