» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 8:44:26 PM (IST)

பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் இன்று (11.09.2025) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மாவட்ட எல்லை சோதனை சாவடிகள் உட்பட மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று சூரங்குடி மற்றும் கோடாங்கிபட்டி ஆகிய சோதனை சாவடிகளுக்கு நேரில் சென்றும், மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு ரோந்து மேற்கொண்டும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் பணியை ஆய்வு செய்து காவல்துறையினருக்குஅறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

கல்வி கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசுக்கு விஜய் கேள்வி!
சனி 13, செப்டம்பர் 2025 4:10:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு!
சனி 13, செப்டம்பர் 2025 3:54:37 PM (IST)
