» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போத்தீஸ் ஜவுளிக்கடைகளில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:19:45 PM (IST)
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் போத்தீஸ் ஜவுளிக்கடையில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை திநகரில் உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 3 கார்களில் 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலையிலேயே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் கூட குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இந்த நிலையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாத சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது.
நீலாங்கரையில் உள்ள ரமேஷ் மகன்கள் அசோக், போத் ராஜா ஆகியோர் வீடுகளிலும் ஐடி சோதனை நடத்தப்படுகிறது. அது போல் குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மகால் மற்றும் துணிக் கடையிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை காரணமாக பல இடங்களில் போத்தீஸ் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
சனி 13, செப்டம்பர் 2025 5:30:14 PM (IST)

விஜய்யின் தி.மு.க. எதிர்ப்பு ஆரோக்கியமானது: தமிழிசை பேட்டி!
சனி 13, செப்டம்பர் 2025 4:49:11 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

கல்வி கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசுக்கு விஜய் கேள்வி!
சனி 13, செப்டம்பர் 2025 4:10:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு!
சனி 13, செப்டம்பர் 2025 3:54:37 PM (IST)
