» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய அரசு ஊழியர் : விதவை பெண் விஷம் குடித்து தற்கொலை!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 4:19:24 PM (IST)
குலசேகரம் அருகே திருமண ஆசைகாட்டி அரசு ஊழியர் ஏமாற்றியதால் விதவை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடை துாக்கியை சேர்ந்தவர் ரமணி 41. இவரது கணவர் இறந்துவிட்டார். 15 வயது மகள் உள்ளார். அவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குலசேகரம் போலீசார் விசாரித்தனர்.
ரமணி தன் தந்தை ஜார்ஜுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் கூறியிருப்பதாவது: அரசின் கருணை வேலை கேட்டு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். அந்த பிரிவில் பணிபுரியும் ஊழியர், என்னிடம் அன்பாக பேசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டினார். இதை நம்பி, அவரிடம் நகை, பணம் கொடுத்தேன். அவர் என்னை ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்தார்.
கேட்டபோது, அவரது உறவினர்கள் அவமானப்படுத்தினர். மனவேதனையில் தற்கொலை செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரிடம் விசாரிக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)
