» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் கனமழை : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வெள்ளி 26, செப்டம்பர் 2025 10:13:17 AM (IST)

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (செப். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவில் கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இன்றும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், குமரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறையில் 140 மி.மீ, கோதையாறில் 130 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory