» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்: 200 பேர் கைது
திங்கள் 29, செப்டம்பர் 2025 3:06:46 PM (IST)

விளாத்திகுளம் அருகே பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,புதூர் கயத்தார், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதம் செய்த அதிக கனமழையினால் மிளகாய், உள்ளி, கொத்தமல்லி, சூரியகாந்தி, கம்பு, சோளம்,உளுந்து, மாசி போன்ற அனைத்து சேதம் அடைந்தனர்.
சேதம் அடைந்த பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த இழப்பீடு வழங்க கோரியும், 2024 - 2025 நிதி ஆண்டிற்கான கனமழையினால் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு தொகையை உடனடியாக விடுவிக்க கோரியும் விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று புதூர் பேருந்து நிலையம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விவசாயிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மறியல் போராட்டம் காரணமாக புதூர் பேருந்து நிலையம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக கரூரில் தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தின் போது உயிரிழந்த 41 பேருக்கு புதூர் பேருந்து நிலையம் முன்பு அனைத்து விவசாயிகள் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு!
சனி 18, அக்டோபர் 2025 11:21:48 AM (IST)

தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 10:43:51 AM (IST)

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)
