» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை : நிர்மலா சீதாராமன்
திங்கள் 29, செப்டம்பர் 2025 4:32:38 PM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, பிரதமர் மோடியின் சார்பாக ஆறுதல் கூறவே நான் இங்கே வந்துள்ளேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலில் கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். காவல் துறை அதிகாரிகளிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர்.
பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அவர் கரூருக்கு வர விருப்பப்பட்டாலும், வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்துள்ளார்.
வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவிப்பேன். நான் இங்கே வந்தது மாநில அரசு என்ன செய்தது? விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது? என்று பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்ல. யார் தவறு செய்தது என்று என்னால் சொல்ல முடியாது. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருமாறு பிரதமர் மோடி சொன்னார். அதற்காகவே வந்துள்ளோம். ஆறுதல் கூறவே வந்தோம். இதில் வேறு எதுவும் இல்லை.
பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தை வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டு கலங்கி நின்றேன். இதுபோன்ற சம்பவம் இனி நாட்டில் எங்குமே நடைபெறக்கூடாது. பிரதமர் மோடி அறிவித்த நிவாரண நிதி பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே வந்து சேரும்." எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு!
சனி 18, அக்டோபர் 2025 11:21:48 AM (IST)

தமிழகத்தில் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 10:43:51 AM (IST)

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)
