» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சி: தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் பலி!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:35:02 AM (IST)



கொல்லம் அருகே கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில், நேற்று, அர்ச்சனா என்ற பெண் கிணற்றில் குதித்ததாகக் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் தீயணைப்பு அதிகாரி சோனி எஸ். குமார் இறங்கினார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகள் கிணற்றுக்குள் இருந்த சோனி எஸ். குமார் மற்றும் அர்ச்சனா மீது விழுந்தது. மேலும், கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகிருஷ்ணனும் தடுப்புச் சுவர் இடிந்ததால் உள்ளே விழுந்தார்.

மற்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பலத்த காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory