» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சி: தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் பலி!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:35:02 AM (IST)

கொல்லம் அருகே கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில், நேற்று, அர்ச்சனா என்ற பெண் கிணற்றில் குதித்ததாகக் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் தீயணைப்பு அதிகாரி சோனி எஸ். குமார் இறங்கினார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகள் கிணற்றுக்குள் இருந்த சோனி எஸ். குமார் மற்றும் அர்ச்சனா மீது விழுந்தது. மேலும், கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிவகிருஷ்ணனும் தடுப்புச் சுவர் இடிந்ததால் உள்ளே விழுந்தார்.
மற்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பலத்த காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை : ஜி.கே.மணி வேதனை
செவ்வாய் 14, அக்டோபர் 2025 12:50:01 PM (IST)

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது: கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:04:25 AM (IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ம்தேதி தொடங்கும் : வானிலை ஆய்வாளர்கள் தகவல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:01:38 AM (IST)

தேசிய சுகாதார திட்டத்தில் 18 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:42:34 AM (IST)

பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கான அரசாணை வெளியீடு: மதிப்பெண் சான்றிதழ் நடைமுறை மாற்றம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:41:21 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடியில் திடீர் விரிசல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 8:29:22 AM (IST)
