» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குரூப்-4 பணிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்பு : 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அவகாசம்!
வியாழன் 30, அக்டோபர் 2025 8:26:24 AM (IST)
குரூப்-4 பணிகளுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் விவரங்கள் கடந்த 22-ஆம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கணினிவழிதிரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் விவரங்கள் (வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர்- பழங்குடி இளைஞர்கள் ஆகிய பதவிகள் தவிர) www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) பிரிவு வாயிலாக நவம்பர் 7-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்தநிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

கண்ணகி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் கபடி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
சனி 1, நவம்பர் 2025 5:25:31 PM (IST)

தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை: துரை வைகோ
சனி 1, நவம்பர் 2025 4:56:34 PM (IST)

விடுப்பட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு முழு நடவடிக்கை எடுப்போம்: ஆட்சியர் உறுதி!
சனி 1, நவம்பர் 2025 4:06:26 PM (IST)

தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 65ஆக தளர்வு : தமிழ்நாடு அரசு உத்தரவு!!
சனி 1, நவம்பர் 2025 3:47:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)




