» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் காலிப்பணி இடங்கள்: நவ.16 வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 3, நவம்பர் 2025 3:18:29 PM (IST)
தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு நவ. 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் (கிரேடு 2) காலிப்பணியிடங்களுக்கு நவ. 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) அறிவித்துள்ளது. காலி பணி இடங்கள்: 1,429.
கல்வி தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல் அல்லது தாவரவியல்-விலங்கியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்து பிளஸ்-டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர்/ சுகாதார ஆய்வாளர் பாடநெறி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி வயது வரம்பு எதுவும் கிடையாது.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-11-2025
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இணையதள முகவரி: https://www.mrb.tn.gov.in/notifications.html
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு : அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 9:22:21 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வணிக வளாக கட்டிடம் இடிந்து காவலர் படுகாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 3, நவம்பர் 2025 7:49:54 PM (IST)

இலங்கை சிறைப்பிடித்த 35 மீனவர்களை விடுவிக்க வேண்டும் : விஜய் வலியுறுத்தல்!
திங்கள் 3, நவம்பர் 2025 4:01:18 PM (IST)

அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரை கொல்ல முயற்சி: ஆட்சியரிடம் புகார்!
திங்கள் 3, நவம்பர் 2025 12:55:06 PM (IST)




