» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்ஐஆர் விவகாரத்தில் மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. : நிர்மலா சீதாராமன் பேட்டி!

செவ்வாய் 11, நவம்பர் 2025 4:37:08 PM (IST)

எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு என்று  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இதற்கு முன்பு எஸ்ஐஆர் நடைபெறவில்லையா? 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை எஸ்ஐஆர் நடைபெற்று இருக்கிறது. ஏதோ பா.ஜ.க.வே பூதத்தைக் கொண்டு வந்தது போல கொடி பிடித்து போராட்டம் செய்வது ஏன்?

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு சூழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். எஸ்ஐஆர் என்றால் என்னவென்றே துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தெரியவில்லை. வாக்காளர் பட்டியல் ரிவிஷனை ரெஸ்டிரிக்ஷன் என்று கூறுகிறார். எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.

ஒரு இடத்தில் கூட வருமான வரித்துறை பதிவு செய்த வழக்குகள் பொய்யாகவில்லை. கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுபோன்ற போலி வாக்காளர்களை நீக்கவே எஸ்ஐஆர் பணி என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory