» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்!

செவ்வாய் 18, நவம்பர் 2025 4:35:47 PM (IST)



2024 ஆண்டு புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதியை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டின் பல்வேறு குளறுபடிகள் செய்து விவசாயிகளை ஏமாற்றுவதை கண்டித்தும், பயிர்களை அழித்து வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேட்டை நாய்களை வைத்து விரட்டி அடிக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது

சங்கத்தின் மாநிலத் தலைவர் ஓஎ நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுப்புராஜ் மாவட்ட தலைவர்கள் நடராஜன் வெள்ளத்துரை பாண்டி செங்கோட்டை வேலுச்சாமி அவைத்தலைவர் வெங்கடசாமி தென்காசி மாவட்ட தலைவர் தாமோதரன் கோவில்பட்டி வட்டாரத் தலைவர் வெங்கடாசலபதி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட சுமார் 120 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர், விவசாயிகளிடம் வனத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் இன்னும் ஒரு வார காலத்திற்குள் பயிர் காப்பீடும் நிவாரணம் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேட்டை நாய்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்பதை கூட்டம் முடிவில் தீர்மானிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory