» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொடர்ந்து 2வது முறையாக உலகக் கோப்பையை வென்ற மகளிர் கபடி அணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

செவ்வாய் 25, நவம்பர் 2025 10:40:05 AM (IST)



தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற மகளிர் கபடி அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: டாக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 35-28 புள்ளிக்கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, கபடி உலகக் கோப்பை 2025-ஐ வென்றுள்ள இந்திய மகளிர் கபடி அணிக்கு என் பாராட்டுகள்!

தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றிருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமித தருணம்! சரியான ஆதரவும், முன்னேறுவதற்கான சூழலும் அமைந்தால், உலக அரங்கைத் தங்கள் வசமாக்க இயலும் என மீண்டுமொருமுறை இந்தியாவின் மகள்கள் நிரூபித்துள்ளனர்!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory