» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா தேர் பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
புதன் 3, டிசம்பர் 2025 10:18:13 AM (IST)

நாகர்கோவில் அருகே கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவில் தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழா நவ.23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டன. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் நாள் திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று டிசம்பர் 3 தேர் பவனி நடைபெற்றது. தேர்பவனியில் பக்தர்களின் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிகழ்சியில் குமரி மாவட்டம் மட்டுமல்ல நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். தேர் பவனியை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை எரிப்பு!
புதன் 3, டிசம்பர் 2025 8:19:45 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் முற்றுகை!
புதன் 3, டிசம்பர் 2025 8:09:21 PM (IST)

தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2பேர் கைது : 18½ பவுன் நகைகள் பறிமுதல்!!
புதன் 3, டிசம்பர் 2025 4:51:24 PM (IST)

நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடியவில்லை: திமுக அரசை சாடிய விஜய்!
புதன் 3, டிசம்பர் 2025 4:41:21 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 3, டிசம்பர் 2025 4:13:49 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
புதன் 3, டிசம்பர் 2025 3:41:45 PM (IST)


