» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)
நாகர்கோவில் அருகே குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர் மற்றும் உடந்தையாக இருந்த நடத்துநர் ஆகியோருக்கு போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்தனர்.
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் நேற்று (டிச. 10) செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், மினி பஸ் ஓட்டுநரான கொடுப்பைக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெபர்சன் (48) என்பவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த மினி பஸ்ஸை பறிமுதல் செய்தனர். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் ஜெபர்சனுக்கு ரூ. 17,000-ம், இதற்குப் பொறுப்பான நடத்துநருக்கு ரூ. 10,500-ம் என மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:25:21 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:44:35 AM (IST)

வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு: கணவர் உள்பட 3 பேர் கைது
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:32:06 AM (IST)

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் உடன் கூட்டணி : த.வெ.க. கூட்டத்தில் தீர்மானம்
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:43:44 AM (IST)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027 முதல் செயல்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:10:06 PM (IST)


