» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் பேருந்து நிலைய தபால்நிலையம் ஜனவரி 3ம் தேதி மூடல்!
சனி 27, டிசம்பர் 2025 4:11:51 PM (IST)
நாகர்கோவில் பேருந்து நிலைய தபால் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய தபால் நிலையம் வருகிற ஜனவரி 3ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்பட்டு மணிமேடை தபால் நிலையத்துடன் இணைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவரும், நாகர்கோவில் போஸ்டல் போரம் (Postal Forum) உறுப்பினருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது.
இந்திய தபால் தந்தி இலாகாவானது நூற்றாண்டு காலமாக இயங்கி வருகின்றது. சில வருடங்களுக்கு முன்பு வங்கியும், இன்சூரன்ஸ் உட்பட பல திட்டங்கள் துவங்கி ஏழை மக்களுக்கும் நல்ல பலன் கிடைத்து வருகின்றது. கடந்த 100 வருட காலமாக இயங்கி வந்த தபால் இலாகா தற்பொழுது சேவை மனப்பான்மை மாறி வணிக நிறுவனமாக மாறியுள்ளது.
இதன் அடிப்படையில் தற்பொழுது இந்தியா முழுவதும், தமிழ்நாட்டிலும் உள்ள பல தபால் நிலைங்கள் வாடகை அதிகம், குறிப்பாக நாகர்கோவில் நகராட்சியினர் அண்ணா பேருந்து நிலையத்திலுள்ள கட்டிடத்திற்கு வாடகை கூடுதலாக இருப்பதால் அங்கிருந்து (வடிவீஸ்வரம்) தபால் நிலையத்தை மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளது வருகிற ஜனவரி 2026, 3ம் தேதி முதல் மூட உள்ளார்கள்.
அது மட்டுமள்ள நாகர்கோவில் வடசேரி நாகர்கோவில் பஜார், நாகர்கோவில் மேற்கு நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் மற்றும் மறவன் குடியிருப்பு ஆகிய 5 இடங்களில் தபால் நிலையங்களை மூடி அதன் அடுத்துள்ள தபால் நிலையங்களோடு இணைக்க முடிவு செய்துள்ளதாக அறிகின்றோம்.
இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபொழுது வருமானம் இல்லாத தபால் நிலயங்கள் மூட இந்திய தபால் நிலைய நிர்வாகம் முடிவு செய்து சில நாட்களில் விரைவில் மூட உள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஏழை, விவாசய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் ஆதலால் மூடும் திட்டத்தை மத்திய அரசு உடன் கைவிட வேண்டும் தொடர்ந்து செயல்பட அரசு உதவி செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்
சனி 27, டிசம்பர் 2025 5:16:14 PM (IST)

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூரில் 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்!
சனி 27, டிசம்பர் 2025 5:00:20 PM (IST)

நாதக வெற்றிதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும்: சீமான் பேச்சு
சனி 27, டிசம்பர் 2025 4:31:48 PM (IST)

தலைமை செயலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட முயற்சி : சென்னையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 12:26:41 PM (IST)

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: சிவகாசி அருகே சோகம்!
சனி 27, டிசம்பர் 2025 12:00:34 PM (IST)

மார்கழியில் மக்களிசை: பறை இசைத்து கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்!
சனி 27, டிசம்பர் 2025 10:58:05 AM (IST)


