» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூர் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்!
திங்கள் 29, டிசம்பர் 2025 11:06:53 AM (IST)

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமபுரத்தில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகப் பரப்புரைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர். மேலும், துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல், கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேட்டுப்பாளையம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜன.1 முதல் அமல்!
திங்கள் 29, டிசம்பர் 2025 11:38:29 AM (IST)

வெல்லும் தமிழ் பெண்கள்: விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு
திங்கள் 29, டிசம்பர் 2025 11:23:34 AM (IST)

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களின் நேரம் ஜன.1 முதல் மாற்றம்!
திங்கள் 29, டிசம்பர் 2025 11:20:08 AM (IST)

காரில் ஏற முயன்றபோது கீழே விழுந்த விஜய் : சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 11:14:34 AM (IST)

விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மரியாதை!
ஞாயிறு 28, டிசம்பர் 2025 1:35:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து 219 மாணவ-மாணவிகளை கீழடிக்கு அழைத்து சென்ற கனிமொழி எம்.பி.
ஞாயிறு 28, டிசம்பர் 2025 10:52:57 AM (IST)


