» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 6, ஜனவரி 2026 8:30:12 AM (IST)

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி அரங்கேறியது. இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மருத்துவ சிகிச்சையை சுட்டிக்காட்டி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


மக்கள் கருத்து

BabuJan 6, 2026 - 06:31:24 PM | Posted IP 172.7*****

orula yellarum nallavanga/yokians police ketavanga mathiri pesuvanga ne nimathya un pondati pulla koda thunguva avanga road la / panila ninnu velai seiranga yella manusanukum athikaram kidacha konjam ketha than irukum sila neram ipad sikkalil mati kolkirargal yella idathulayum nalavanum irukan ketavanum irukan athu than ingayum so ne policea nu vanthurathenga da yokians mathiri nan police ilai yenna porutha varai police latthiya kela vachanthan karanam intha ara mandaikalum sillaraikalum road la bike la thervukulla pannura kothu iruke 80s 90s la police a patha onnuku poiruvanuga ipo signal la police ku munnadiye phone pesitu poranuga po athukum mela sila mothevigal mob pathute vanthu nammala idichu thaliranuga ip solla pona police onjam ilai rompave soft aitanga cycle la lathiya vachutu varaum oru yettayava pathu payanthathu oru kalam ipo ins munnadiye triples poranuga phone pesite poranuga overa speda poranu solite polam

இது தான் திராவிடம் புகுந்த தமிழ்நாடுJan 6, 2026 - 12:10:24 PM | Posted IP 162.1*****

தமிழ் நாட்டில் காவலர்கள் தப்பு செய்தால், உருப்படியாக தண்டனை கிடைக்காது , கேரளா நீதிமன்றத்தை அணுகி விடுங்கள் , தமிழகத்தில் இருக்கும் நிறைய கொலை குற்றவாளிகள் தூக்குத்தண்டனை கிடைக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory