» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி-மைசூர் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

வியாழன் 8, ஜனவரி 2026 8:38:08 PM (IST)

பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. 

இதன்படி வண்டி எண்.06283 09-01-2026 (வெள்ளிக்கிழமை), 13-01-2026 (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் மைசூரில் இருந்து மாலை 06:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

வண்டி எண். 06284 10-01-2026 (சனிக்கிழமை), 14-01-2026 (புதன்கிழமை) ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து மதியம் 02-00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07-45 மணிக்கு மைசூர் சென்றடையும்.

இந்த ரயில்கள் மாண்டியா, மாத்தூர், சென்னப்பட்டணா, ராமநகரம், கெங்கேரி பெங்களூர் பெங்களூர் கண்ட்ரோல்மென்ட் ஓசூர் தர்மபுரி சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் மா.பிரம்மநாயகம் நன்றி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory