» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒட்டப்பிடாரம் அரசு கல்லூரியில் அமைச்சர் கோவி. செழியன்ஆய்வு
திங்கள் 12, ஜனவரி 2026 11:38:10 AM (IST)

ஒட்டப்பிடாரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்லூரி யூனியன் அலுவலக கட்டிடத்தில் இந்த கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்லூரி யூனியன் அலுவலக கட்டிடத்தில் இந்த கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கல்லூரி அலுவலகத்தில் பேராசிரியர்களின் வருகை பதிவேடு, கல்லூரியில் இயங்கி வரும் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரியில் கட்டமைப்பு வசதிகள் குறித்து பேராசிரியர்களிடம் கேட்டறிந்தார். வகுப்பறைகளுக்கு சென்ற அவர் மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினார். அப்போது கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவ மாணவியருக்கு அரசு வழங்கிவரும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார். விரைவில் புதிய கட்டிடத்திற்கு கல்லூரியை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சண்முகையா எம்.எல்.ஏ, கல்லூரி முதல்வர் கிரேசா ஜேக்கப், தாசில்தார் சண்முகவேல், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!
வெள்ளி 13, மார்ச் 2026 12:13:57 PM (IST)

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!
வெள்ளி 13, மார்ச் 2026 12:10:01 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக பொட்டலூரணி மக்கள் போராட்டம்!
வெள்ளி 13, மார்ச் 2026 10:28:37 AM (IST)

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 13, மார்ச் 2026 8:40:03 AM (IST)

திருச்செந்தூர் கோவிலுக்கு மீண்டும் சுற்றுப்பேருந்து இயக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி!
வெள்ளி 13, மார்ச் 2026 8:08:09 AM (IST)

