» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக​வின் கொடூர​மான பிடி​யில் இருந்து தமிழகத்தை விடு​வித்​தாக வேண்​டும்: பிரதமர் மோடி பேச்சு

சனி 24, ஜனவரி 2026 11:33:23 AM (IST)


திமுக​வின் கொடூர​மான பிடி​யில் இருந்து தமிழகத்தை விடு​வித்​தாக வேண்​டும். பெண்​களுக்​குப் பாது​காப்​பான ஆட்​சியை வழங்​கு​வோம் என்று மது​ராந்​தகத்​தில் நடை​பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசினார். 

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் (என்​டிஏ) தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டம் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. அவர் பேசி​ய​தாவது: தமிழகம் ஒரு மாற்​றத்​துக்கு தயா​ராகி​விட்​டது. திமுக​வின் மோச​மான ஆட்​சி​யில் இருந்து விடுபட துடிக்​கிறது. பாஜக​வின் என்​டிஏ அரசைத்​தான் தமிழகம் இப்​போது விரும்​பு​கிறது. தமிழகத்தில் இருந்து திமுக அரசை விரட்டி அடிக்க, திமுக ஆட்​சி​யின் முடிவுரைக்​கான கவுன்ட் டவுன் தொடங்​கி​விட்​டது.

தமிழக மக்​களுக்கு திமுக அரசு நம்​பிக்கை துரோகம் செய்​து​விட்​டது. திமுக அரசை ‘சிஎம்​சி’ அரசு என்று மக்​கள் அழைக்​கின்​றனர். அதாவது, ‘கரப்​ஷன் - மாஃபியா - க்ரைம்’. திமுக அரசு ஊழல், குற்​ற​வாளிகுழுக்​கள், குற்​றங்​கள் ஆகிய​வற்​றை​தான் ஆதரிக்​கிறது. அதனால், திமுக மற்​றும் ‘சிஎம்​சி’ ஆகிய இரண்​டை​யுமே கிள்ளி எறிய வேண்​டும் என்று தமிழக மக்​கள் தீர்​மானித்​து​விட்​டனர்.

தங்​களது ஒரே ஒரு குடும்​பத்துக்காக மட்​டுமே திமுக அரசு இயங்​கிக் கொண்​டிருக்​கிறது. வாரிசு அரசி​யல், ஊழல், பெண்​களை அவதூறாகப் பேசுவது, கலாச்​சா​ரத்தை வசை​பாடு​வது போன்றவற்றை தொடர்ச்​சி​யாக செய்கின்றனர். திமுக​வின் கொடூர​மான பிடி​யில் இருந்து தமிழகத்தை விடு​வித்​தாக வேண்​டும். கடந்த 11 ஆண்​டு​களில் மத்​திய என்​டிஏ அரசு அதி​கார பகிர்வு வாயி​லாக மட்​டுமே தமிழகத்​துக்கு சுமார் ரூ.3 லட்​சம் கோடி அளித்​துள்​ளது. கடந்த 2014-ம் ஆண்​டுக்கு முன்பு மத்​திய காங்​கிரஸ் - திமுக கூட்டணி ஆட்​சி​யில் வழங்​கியதை​விட இது 3 மடங்கு அதி​கம். அதே​போல, தமிழகத்தில் ரயில்வே திட்​டங்​களுக்கு 7 மடங்கு அதிக நிதி அளித்​துள்​ளது. கடந்த 11 ஆண்​டுகளில் தமிழக மக்​களின் நலனுக்​காக மத்​திய அரசு ரூ.11 லட்​சம் கோடி உதவி​களை அளித்​துள்​ளது.

போதைப் பொருள் குற்​றங்​களைச் செய்​யும் மாஃபியா கும்பலிடம் இளைஞர்​களை விட்​டு​விட்​டது திமுக அரசு. தங்​கள் கண்​முன்பு குழந்​தைகள் சீரழி​வதைப் பார்த்து பெற்​றோர் துடிக்​கின்​றனர். இளைஞர்களை போதைப் பொருள் அபா​யத்​தில் இருந்து மீட்க வேண்​டும். நீங்​கள் என்டிஏவுக்கு அளிக்​கும் ஒவ்​வொரு வாக்கும் தமிழகத்தை போதை அபா​யத்​தில் இருந்து மீட்​டெடுக்க உதவும்.

தமிழகத்​தில் பாஜக - என்​டிஏ​வின் இரட்டை இன்​ஜின் அரசு அவசி​ய​மான​தாகும். மத்​திய அரசோடு இணைந்து பயணிக்​கும்​போது, முதலீடு​கள், வளர்ச்சி அனைத்​தும் எளி​தாக நடை​பெறும். உங்​கள் வாக்​கு​களால் தமிழகத்​தில் என்​டிஏ அரசை அமைத்​துத் தாருங்​கள். எங்​கள் அரசு பெண்​களின் பாது​காப்பை உறு​திப்​படுத்​தும்.

சமீபத்​தில் முரு​கப் பெரு​மானுக்கு கார்த்​திகை தீபம் ஏற்​றும் விஷ​யத்தில் நம் தலை​வர்​கள் எல்​லாம், பக்​தர்களின் அதி​காரங்​கள், உரிமை​களுக்கு குரல் கொடுத்தனர். ஆனால், திமுக​வும், அதன் கூட்​ட​ணி​யும் தங்​களது வாக்கு வங்​கியை குஷிப்​படுத்த நீதி​மன்​றங்​களை​யும் விட்​டு​வைக்​காமல், அவர்​களை​யும் அவமானப்​படுத்​தி​ன. தமிழக இளைஞர்​கள் அனை​வரும் நமது பாரம்​பரி​யத்​தைக் கொண்டாடி மகிழ வேண்​டும். அதற்கு என்​டிஏ அரசு அனைத்து வழிகளி​லும் துணை நிற்​கும்.இவ்​வாறு பிரதமர் பேசி​னார்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், புதிய தமிழகம் தலை​வர் ஏ.சி.சண்​முகம், தமமுக தலை​வர் ஜான் பாண்​டியன், புரட்சி பாரதம் தலை​வர் ஜெகன்​மூர்த்​தி, தென்​னிந்​திய ஃபார்​வர்ட் பிளாக் கட்​சித் தலை​வர் திரு​மாறன், உழவர் உழைப்​பாளர் கட்​சித் தலை​வர் செல்​ல​முத்​து, பெருந்​தலை​வர் மக்​கள் கட்​சித் தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் உள்​ளிட்ட கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் அனை​வரும் பங்​கேற்​றனர்.

தமிழக பாஜக தேர்​தல் பொறுப்​பாளர் பியூஷ் கோயல், எல்​.​முரு​கன், அண்​ணா​மலை, தமிழிசை, அதி​முக நிர்​வாகி​கள் கே.பி.​முனு​சாமி, எஸ்​.பி.வேலுமணி, தங்​கமணி, பாஜக​வின் மத்​திய அரசு நலத்​திட்​டப் பிரிவு மாநிலச் செய​லா​ளர் எஸ்​. ​விமல்​சந்த், அதி​முக மகளிர் அணி இணைசெய​லா​ளர் மரகதம் குமர​வேல் எம்​எல்ஏ உள்​ளிட்​டோரும் பங்கேற்றனர்.

முன்​ன​தாக, சென்னை விமான நிலை​யத்​தில் பிரதமர் மோடியை தமிழக அரசு சார்​பில் அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் வரவேற்​றார். ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், டிஜிபி (பொறுப்​பு) ஜி.வெங்​கட​ராமன் ஆகியோர் உடன் இருந்​தனர்.

சிறுமி ஓவியத்தால் நெகிழ்ந்த பிரதமர்: பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி நிகழ்த்தும் ஆவேச உரையை தொண்டர்கள் ஆரவாரத்துடன் கேட்டபடி இருந்தனர். ஒரு சிறுமி மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் வரைந்த ஓவியத்தை உயர்த்திப் பிடித்தபடி இருந்தார். ஓவியத்தை பிரதமர் பார்த்துவிட மாட்டாரா என்பதிலேயே சிறுமியின் கவனம் இருந்தது. பிரதமரை அவரது தாய் ஆசீர்வதிப்பது போன்ற ஓவியம் அது.

இதை கவனித்த பிரதமர், சட்டென்று பேச்சை நிறுத்தினார். ‘‘ஒரு குழந்தை நீண்ட நேரமாக கையில் ஓர் ஓவியத்தை ஏந்தியபடி நிற்கிறது. அது என் தாயின் படம்போல தெரிகிறது. அதை என்னிடம் எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்று அந்த குழந்தை துடிக்கிறது. குழந்தையே! அந்த படத்தில் உன் பெயர் மட்டும் இருந்தால் போதும்.

நிச்சயம் பெற்றுக்கொள்வேன். அதோடு, என் வாழ்த்துக் கடிதத்தையும் அனுப்பி வைக்கிறேன்’’ என்று கூறிய பிரதமர், உடனே கட்சி நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து, சிறுமியின் பெயர், முகவரியை தவறாமல் குறித்துக்கொண்டு, ஓவியத்தை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory