» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாயர்புரத்தில் ரூ.1.67 கோடியில் புதிய பேருந்து நிலையம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சனி 7, பிப்ரவரி 2026 3:11:28 PM (IST)



சாயர்புரத்தில் ரூ.1.67 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் ரூ.1.67 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். சாயர்புரத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி தலைவர் அ.பாக்கியலெட்சுமி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். திருநெல்வேலி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ், தூத்துக்குடி மாவட்ட உதவி செயற்பொறியாளர் ஹரிகரன், சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திருவைகுண்டம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் பி.ஜி.ரவி, தெற்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் ஜெபதங்கம் பிரேமா, சாயர்புரம் நகர தி.மு.க செயலாளர் கண்ணன், பெருங்குளம் நவநீத முத்துக்குமார், சாயர்புரம் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் த.அறவாழி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி, பொருளாளர் பத்திரகாளிமுத்து, ஒப்பந்ததாரர் ஜெ.பிரேம் இம்மானுவேல், தெற்கு மாவட்ட முன்னாள் காங். தலைவரும் பேரூராட்சி கவுன்சிலருமான எஸ்.வி.பி.எஸ்.பொ.ஜெயக்குமார், வட்டாரத் தலைவர்கள் ஜெயசீலன் துரை, சொரிமுத்து பிரதாபன், பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி, கவுன்சிலர்கள் கிறிஸ்டோபர், இந்திரா, பிரவீனா, பிளாட்டினா மேரி, முத்துமாரி, அமுதா, சுமதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory