» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!

திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)



வெள்ளமடம் அருகே  கார் - ஆட்டோ மோதிய கோர விபத்தில், ஆட்டோவில் பயணித்த தாய் மற்றும் மகன் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இன்று அதிவேகமாக வந்த காரும், ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. ஆட்டோவில் பயணம் செய்த வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வரும் போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைபாஸ் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory