» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 3:13:44 PM (IST)



கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்காரத் தோரண நுழைவு வாயிலை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வருகை தந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த முதலமைச்சர், அங்கிருந்து கார் வழியாகக் குமரி மாவட்டத்திற்கு வந்தார். 

அவருக்குக் கன்னியாகுமரி 'ஜீரோ பாயிண்ட்' பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பைத் தொடர்ந்து, கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்களை அவர் நேரில் சந்தித்துச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்புப் பகுதியில் ரூ. 1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்காரத் தோரண நுழைவு வாயிலை' முதலமைச்சர் முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory