» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்: பா.ஜ.க. பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு!
ஞாயிறு 22, மார்ச் 2026 8:57:20 AM (IST)
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, பொன்மாரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், தெர்மல் நகர் காவல் நிலையம் அருகேயுள்ள பாரதி நகர் அருங்காட்சியகம் முன்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாகக் காரில் வந்த பா.ஜ.க. பிரமுகர்களான முரளி மற்றும் முருகேசன் ஆகியோரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிக் காரில் கட்சிக் கொடிகளைக் கட்டியிருந்ததோடு, கட்சித் துண்டையும் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, இருவரும் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அந்த நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் விதிகளை மீறியது தொடர்பாகப் பறக்கும் படை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், தெர்மல் நகர் போலீசார் முரளி மற்றும் முருகேசன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)

தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து : 60 பயணிகள் உயிர் தப்பினர்!
ஞாயிறு 22, மார்ச் 2026 8:49:24 AM (IST)

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சனி 21, மார்ச் 2026 5:06:31 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

