» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரில் புகார்!

சனி 28, மார்ச் 2026 3:59:14 PM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தார்.

சென்னை பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அதற்குத் தேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று தலைமைச் செயலகம் வந்த விஜய், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினார்.

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விஜய் அளித்த புகாரில் "தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தைத் திட்டமிட்டு முடக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டுமானால், தலைமைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 10 உயர்மட்ட அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனக்குப் பிரச்சார அனுமதி மறுக்கப்பட்டதற்கான சூழல்கள் மற்றும் அதிகாரிகள் முன்வைத்த காரணங்களை ஆட்சேபித்து, 10 முக்கியக் காரணங்களைத் தனது மனுவில் அவர் பட்டியலிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory