» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு: டி.எஸ்.ஆர். சுபாஷ் தேசிய செயலாளராகத் தேர்வு!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)



அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளராக  டி.எஸ்.ஆர். சுபாஷ் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் 11-வது தேசிய மாநாட்டில், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளராகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, தேசிய செயற்குழு உறுப்பினர்களாக எம்.பி. மதிமகாராஜா (தலைவர், புதுச்சேரி பத்திரிகையாளர்கள் யூனியன்). எஸ். மோகன்ராஜ் (கோவை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகளுக்கு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் வருகையைப் பாராட்டி, தேசியச் செயலாளர் டி.எஸ்.ஆர். சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்துச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இம்மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர் சங்கப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory