» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் எடப்பாடி பழனிசாமி: கனிமொழி எம்.பி. காட்டம்!

வியாழன் 9, ஏப்ரல் 2026 3:58:58 PM (IST)



தனிநபர் விமர்சனங்களில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவது அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர், திமுக அரசு எப்போதும் மக்களுக்கான அரசாகவும், குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அரசாகவும் விளங்குவதாகக் குறிப்பிட்டார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வருங்காலத் தலைமுறையினரின் கல்வி மற்றும் எதிர்காலத்தை உறுதி செய்யவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை மக்கள் நன்கு அறிவார்கள் என்று அவர் தெரிவித்தார். "நாங்கள் செய்த சாதனைகளைத் தலைநிமிர்ந்து சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கிறோம்" என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து அதிமுக தரப்பை விமர்சித்த அவர், வரும் தேர்தலில் தோல்வி உறுதி என்பது தெரிந்துவிட்டதால், எடப்பாடி பழனிசாமி பயத்தின் காரணமாக எதை எதையோ பேசத் தொடங்கியுள்ளதாகச் சாடினார். முதலமைச்சரை மிகவும் கீழ்த்தரமான முறையில் அவர் விமர்சித்து வருவதாகவும், தான் கூட ஒரு காலத்தில் முதலமைச்சராகப் பதவி வகித்தோம் என்ற கண்ணியத்தை மறந்துவிட்டு அவர் தரம் தாழ்ந்து பேசி வருவதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.

மக்களுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான திட்டங்களைப் பற்றிப் பேச வழியில்லாமல், வெறும் தனிநபர் விமர்சனங்களில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவது அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது என்றும் கனிமொழி எம்.பி. தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory