» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலூரில் விஜய் நாளை பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:35:20 AM (IST)

கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கிறது. திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் பொதுக் கூட்டம் நடத்தி ஒரு மாவட்டத்தின் அத்தனை வேட்பாளர்களையும் மேடையேற்றி வாக்கு சேகரித்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று அந்த வேட்பாளரை தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் மக்களிடையே நன்றாக எடுபடுகிறது. பிரச்சாரத்தின் போது மக்களுடன் பேசி ஜாலியாக பிரச்சாரத்தை செய்து வருகிறார். அதேபோல் தவெக தலைவர் விஜய்யும் நேற்று முன் தினம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்யும் சூழலில், நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் பிரம்மாண்டமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதற்கான அனுமதியை பெற தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. அதற்கு தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரமே காரணமாக அமைந்துள்ளது.

ஏனென்றால் தேர்தல் ஆணைய விதிகளின்படி முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி விஜய் தரப்பு முன்கூட்டியே கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் திட்டக்குடி, நெய்வேலி, வடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி இருந்தார். தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உதயநிதி ஸ்டாலின் மாற்று திட்டத்தை செயல்படுத்துவார் என்று பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory