» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)
திருச்சி-பாலக்காடு இடையிலான ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 16843) வருகிற 30-ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் (மே) 1, 2, 4 5-ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயிலானது திருச்சி-எழமனூர் வரை மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது முன்பதி வில்லா சிறப்பு ரயிலாக எழமனூரில் இருந்து பாலக்காடு செல்லும். இந்த ரயில் அடுத்த மாதம் 2, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-முத்தரசநல்லூர் வரை மட்டும் இயங்கும். முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக முத்தரசநல்லூரில் இருந்து பாலக்காடு வரை இந்த ரயில் செல்லும்.
ரயில்களின் சேவையில் மாற்றம்
இதேபோல் மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் ரோடு- அம்பாதுரை இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16848) அடுத்த மாதம் 3, 4, 5, 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்துசெல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி- ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 17070) அடுத்த மாதம் 8-ஆம் தேதி மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1777100644.jpg)
தென் தமிழக கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி : ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:34:37 PM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கணிப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:15:10 PM (IST)

சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 25, ஏப்ரல் 2026 10:44:27 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 9:02:30 AM (IST)

செய்தியாளர்களைத் தடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் டி.எஸ்.ஆர். சுபாஷ் புகார்!
சனி 25, ஏப்ரல் 2026 8:42:02 AM (IST)

