» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு: அப்போ புரியல, இப்போ புரியுது - கஸ்தூரியின் பதிவு வைரல்!

வியாழன் 7, மே 2026 3:33:39 PM (IST)



தற்போது நிலவும் மெஜாரிட்டி சிக்கல் தகவல்களுக்கு இடையே, ரஜினி-ஸ்டாலின் சந்திப்பு குறித்து கஸ்தூரியின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற முடியாமல் திணறி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சட்டமன்ற நடைமுறைப்படி, தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒன்றைக் கைவிட வேண்டியிருக்கும். மேலும், சபாநாயகராக ஒருவரை நியமிக்க வேண்டியிருப்பதால், சபையில் தவெக-வின் நேரடி வாக்கு எண்ணிக்கை 106 ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பெரும்பான்மைக்குத் தேவையான 12 கூடுதல் இடங்களுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு இன்றித் தவெக ஆட்சியைக் காப்பாற்றுவது பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

ரஜினியின் அறிக்கை - ஒரு 'பிளாஷ்பேக்':

முன்னதாக, "திமுக மிரட்டலால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை" என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது சர்ச்சையானது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக கடந்த மார்ச் 17-ஆம் தேதி ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கஸ்தூரியின் கமெண்ட்:

தற்போது நிலவும் மெஜாரிட்டி சிக்கல் மற்றும் திமுக-அதிமுக இணைய வாய்ப்புள்ளதாகக் கிளம்பிய தகவல்களுக்கு இடையே, ரஜினி-ஸ்டாலின் சந்திப்பு குறித்துத் தகவல்கள் கசிந்துள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "அப்போ புரியல, இப்போ புரியுது” எனப் பதிவிட்டுள்ளார். ரஜினி அன்று சொன்னதற்கும், இன்று நடக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் இடையே உள்ள ரகசியத் தொடர்பையே கஸ்தூரி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

திமுக மறுப்பு:
இதற்கிடையில், அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாகப் பரவிய செய்திகளை திமுக தலைமை முற்றிலுமாக மறுத்துள்ளது. எது எப்படி இருந்தாலும், 108 இடங்களை வைத்துக்கொண்டு விஜய் எப்படிச் சட்டசபையில் தப்பிப்பார் என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory