» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீரசக்கதேவி ஆலய விழா: இளைஞர்களின் ஜோதி ஓட்டம்!

வெள்ளி 8, மே 2026 11:43:41 AM (IST)



பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய கொடை விழாவை முன்னிட்டு, கயத்தாரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு வீர ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தில்  இருந்து இந்த ஜோதி ஓட்டம் தொடங்கியது. இதில் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த ஜோதி ஓட்டமானது கயத்தார் மணிமண்டபத்தில் தொடங்கி மதுரை மெயின் ரோடு, பசுவந்தனை, கடம்பூர் மற்றும் கீழமங்கலம் வழியாக சுமார் 20 கிலோமீட்டர் கடந்து பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் லாரிகள் அணிவகுத்துச் சென்றன. இதற்கான ஏற்பாடுகளை வீரசக்கதேவி ஆலய விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory