» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு பாடை கட்டி நூதன போராட்டம் - கோவில்பட்டியில் பரபரப்பு!

வியாழன் 4, ஜூன் 2026 12:01:22 PM (IST)



கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பாடை கட்டி நூதனப் போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை முறையிட்டும், எவ்வித முயற்சியும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து கோவில்பட்டி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாடை கட்டி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory