» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

புதன் 17, ஜூன் 2026 8:50:57 PM (IST)



கடந்த 2021-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று (ஜூன் 17) தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2021-ஆம் ஆண்டு 15 வயதுடைய பள்ளிச் சிறுமி ஒருவருக்குத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இச்சம்பவம் குறித்துக் கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திகேயன் (32) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இன்று இவ்வழக்கில் முக்கியத் தீர்ப்பை வழங்கினார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என நீதிபதி உறுதி செய்தார். குற்றவாளி கார்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 17,500/- அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory