» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இப்போது தேர்தல் வந்தாலும் விஜய் 180 இடங்களில் ஜெயிப்பார்: வைகோ பேட்டி!

புதன் 8, ஜூலை 2026 4:21:22 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் 180-க்கும் மேற்பட்ட இடங்களை விஜய் ஜெயித்துக் காட்டுவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களைத் தமிழ்நாட்டில் இருந்து வேரோடு அகற்றுவதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட காலமாகத் தீவிர சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, களப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை வைகோ கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "ஸ்டெர்லைட் பிரச்சனை, முல்லை பெரியாறு அணை பிரச்சனை, சீமை கருவேல மரங்கள் அகற்றம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்காக 20 ஆண்டுகாலமாகப் போராடி வருகிறேன். முல்லை பெரியாறு அணையை உடைக்கக் கேரளா அரசு தீவிரமாக இருந்தபோது, அதை எதிர்த்து நடைபயணம், மறியல் எனப் போராட்டங்களை நடத்தினோம். 

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்தபோது, அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுத் தடை வாங்கப்பட்டது. மேகதாது அணைப் பிரச்சனைக்கு எதிராகவும் கட்சிப் பாகுபாடின்றிப் போராடினோம். தமிழக அரசு சீமை கருவேல மரங்களை அகற்றுவதைப் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய வைகோ, "பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தொடக்க காலக் கோரிக்கை. ஆனால், நிதி நெருக்கடிக்கு இடையே அதை எப்படிச் செயல்படுத்த முடியும்? கல்வி நிறுவனங்கள் தொடங்கக் கூடுதல் கட்டணம் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் தலைவிரித்து ஆடிய ஊழல் என்னும் கொடிய நோயைத் தவெக தலைவர் ஜோசப் விஜய் ஒழித்துள்ளார். 

தற்போதைய சூழலில் தவெக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. செந்தில் பாலாஜி அண்ணா திமுகவில் இருந்தபோது எவ்வளவு ஊழல் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது மீண்டும் தேர்தல் நடந்தால் கூட விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய கள நிலவரம்” என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

முன்னாள் தொண்டன்Jul 8, 2026 - 06:15:33 PM | Posted IP 162.1*****

அந்த காசுக்காக வாடகை வாய் சிகரெட் கம்பெனி ஓனர் தெலுங்கு கோபாலை அடித்து துவைத்து சும்மா இருக்க சொல்லுங்கடா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory