» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)
குமரி மாவட்டம் அருமனை அருகே சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்களான வாலிபர் மற்றும் இளம்பெண் மது போதையில் காயங்களுடன் சாலையில் மயங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் வாலிபர்கள் மற்றும் இளம்பெண், கடந்த ஜூலை 5 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அருமனை அருகே சாலையில் இவர்கள் அனைவரும் கடுமையான மது போதையில், உடலில் காயங்களுடன் மயங்கிக் கிடந்துள்ளனர்.
இதைக் கண்ட பெண் காவலர் பிரேமலதா, போதையில் மயங்கிக் கிடந்த இளம் பெண்ணை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அவருடன் போதையில் காயங்களுடன் இருந்த இதர வாலிபர்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் 3,084 ஏக்கர் நில விவகாரம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு
சனி 11, ஜூலை 2026 5:26:04 PM (IST)

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., - பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமுகங்கள் இடையே சர்வதேச ஒப்பந்தம்!
சனி 11, ஜூலை 2026 4:28:30 PM (IST)

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறு குறு தொழில் கடன் உதவி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 11, ஜூலை 2026 3:22:48 PM (IST)

கனிமொழி எம்.பி. வாகனம் தடுத்து நிறுத்தம்; 1 கி.மீ நடந்து சென்று அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை!
சனி 11, ஜூலை 2026 12:55:07 PM (IST)

கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை: மினி மைதானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 12:44:31 PM (IST)


