» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனித் திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

புதன் 22, ஜூலை 2026 8:05:32 AM (IST)

kuranginiSaparam.jpg

பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி தாமிரபரணி ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் கடந்த 30-ஆம் தேதி கால்நாட்டுகளுடன் ஆனித் திருவிழா தொடங்கியது. கடந்த 14-ஆம் தேதி அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மறுநாள் அதிகாலை 1 மணிக்கு ஆனி பெருந்திருவிழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, உற்சவர் நாராயணர், பாமா, ருக்மணி அம்பாள்களுடன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

எட்டாம் திருநாளான தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று மதியம் 1 மணிக்கு முத்துமாலை அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோவிலைச் சுற்றி நறுமணப் பொருட்கள் அடங்கிய தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டன.தொடர்ந்து நாராயண சுவாமி, அம்பாள்களுடன் தாமிரபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடைபெற்றது. 

ஆற்றுப்படுக்கையில் சப்பரத்தில் எழுந்தருளிய நாராயணருக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோவிலைச் சுற்றி வலம் வந்து பீடத்தைச் சென்றடைந்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளைக் குரங்கணி 60 பங்கு ஊர்மக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory