» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவை - தூத்துக்குடி இடையே விமான சேவை: மத்திய, மாநில அரசுகளுக்கு தொழில்துறையினர் கோரிக்கை!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:51:13 AM (IST)

தொழில் நகரங்களான கோவை - தூத்துக்குடி இடையே நேரடி விமான சேவையைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், பலர் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இங்கிருந்தும், பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்தும் ஜவுளி மற்றும் எந்திரங்களின் உதிரிபாகங்கள் கொச்சி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாகவே பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கோவையில் இருந்து கொச்சிக்கு விமான சேவை உள்ள நிலையில், தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை இல்லை. இதனால் தொழில்துறையினர் ரயில்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் கார்களிலேயே நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
இது குறித்துக் கோவை தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் நந்தகுமார் மற்றும் தொழில்துறையினர் தெரிவித்ததாவது: "மத்திய அரசின் 'உதான்' (UDAN) திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் வான்வழியாக இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திற்கு விமான சேவையைத் தொடங்க வேண்டும்.
கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களிலுமே தற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடப்பதால், ஆரம்பக் கட்டமாக 72 முதல் 78 இருக்கைகள் கொண்ட ஏ.டி.ஆர்.-72 (ATR-72) என்ற சிறிய ரக விமானங்களை இயக்கலாம். இதன் மூலம் தொழில்துறையினர் மட்டுமின்றி, கோவையில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் ஆன்மிகப் பயணிகளும் பெருமளவில் பயனடைவார்கள்."
இது குறித்துக் கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்குத் (AAI) தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் சேவைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது; மீறினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:52:31 PM (IST)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:12:06 PM (IST)

அதிக மதிப்புள்ள கனிமங்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை: புதிய அரசாணை வெளியீடு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:04:00 PM (IST)

பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)


