» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

kktrain.jpg

கன்னியாகுமரியில் இருந்து பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்குத் தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு தற்போது நாகர்கோவில் - கோவை பகல் நேரப் பயணிகள் ரயில் மற்றும் நாகர்கோவில் - கோவை இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 2 தினசரி ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இவை ஈரோடு, திருப்பூர் வழியாகச் செல்வதால், பயண நேரம் அதிகமாகிறது.

அதேவேளையில், திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி - கோவை வழித்தடம் அகலப் பாதையாக மாற்றப்பட்ட பிறகும், அதில் போதிய அளவு ரயில்கள் இயக்கப்படுவதில்லை எனப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ஊட்டி மலை ரயிலைப் பிடிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி:

சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்கள், ஊட்டி செல்லும் பாரம்பரிய மலை ரயிலைப் பிடிக்கும் வகையில் கால அட்டவணையோடு இயக்கப்படுகின்றன.

ஆனால், தென் மாவட்டங்களில் இருந்து நேரடியாக மேட்டுப்பாளையம் செல்ல நேரடி ரயில் வசதி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் சென்றடைவதற்குள் ஊட்டி மலை ரயில் புறப்பட்டு விடுகிறது. இதனால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் 'நியூ ஜல்பைகுரி' வாராந்திர அம்ரித் பாரத் ரயிலில் கோவைக்கு அதிகளவில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதிலிருந்து இவ்வழித்தடத்தில் பயணிகளின் தேவை அதிகமாக இருப்பது தெளிவாகிறது.

மேலும், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் 'பிட்லைன்' விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், அங்கு கூடுதல் ரயில்களை இயக்கச் சாதகமான சூழல் உள்ளது.

எனவே, கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்குத் தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory